
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு, படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பாளர்கள் பிஎம்டபள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கினர். இந்த கார் பரிசை நடிகர் விஜய் சேதுபதி அவரிடம் வழங்கினார். இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து பெரிய வெற்றியை அடைந்தது, மேலும், ஓடிடியில் வெளியானதும் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
‘மகாராஜா’ படம், பாலியல் வன்முறை மற்றும் சமூக அக்கறைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், விஷயமான கதைக்களத்தால் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாகவும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.
தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த பரிசை அளித்து, இயக்குநர் நிதிலனின் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.