
சென்னையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதோடு திமுகவின் கழகச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியும் கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ் பாரதி உதயநிதி ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதை மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கருணாநிதியின் ஆய்வுக் கூட்டங்களில் நான் பலமுறை கலந்து கொண்டுள்ளேன். அப்போது கருணாநிதி தீர்க்கமான முடிவுகளை கூட சட்டென்று எடுப்பதை பார்த்துள்ளேன். இதை வைத்து நான் உண்மையில் சொல்கிறேன். கருணாநிதி உருவத்தில் நான் உதயநிதி ஸ்டாலினை பார்த்து மகிழ்ந்தேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.`