
வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் (62) மற்றும் அவரது மனைவி மாலா (60) ஆகிய இருவரும் ரூ.11 லட்சம் கடன் கொடுத்த விவகாரத்தில் பணத்தை திருப்பி பெற முடியாமல் மன உளைச்சலுக்குள்ளாகி, தற்கொலை செய்துகொண்டனர். சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
முருகேசன் கடந்த காலத்தில் சலவன்பேட்டையைச் சேர்ந்த நபருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். அந்த நபர் உடல்நிலை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். பணம் கேட்டபோது, அந்த நபரின் குடும்பத்தினர் பணத்தை திருப்பித் தர மறுத்து, இறந்தவரிடமிருந்தே வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியதால், முருகேசனும் அவரது மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டனர்.
முருகேசனின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் கடன் விவகாரத்தால் ஏற்பட்ட மனச்சோர்வால் தற்கொலை செய்கிறோம் என குறிப்பிட்டு இருந்தனர்.