மத்திய பிரதேச மாநிலத்தில் சியாம்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் கடந்த இரு வருடங்களாக தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி விட்டதாக புகார் கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. அவர் இரு வருடங்களாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அவர் தார் சாலையில் உருண்டு சென்றார். இதனை சிலர் வீடியோவாக எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயி விண்ணப்பத்தை பெற்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.