பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 35 வயதான வேலையற்ற ஒரு நபர் தனது 7 வயது வளர்ப்பு மகளை, தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் தாய் வீட்டில் இல்லாத சமயம் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் குற்றவாளியின் மிரட்டலால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை.

பின்னர் தனது மகளின் பாதுகாப்பிற்காக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து குற்றவாளி தலைமறைவாகிவிட்டார். போலீசார் தொடர்ந்து தேடிவந்த நிலையில் அவர் பிடிபட்டுள்ளார்.
குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் குற்றவாளிக்கு முன்பும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.