தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 1970களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் இன்றுவரை இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல நடிகர் ராம்சரனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் நடந்த சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சிரஞ்சீவியுடன் செல்பி எடுக்க வந்தார். அவரை திடீரென நடிகர் சிரஞ்சீவி தள்ளிவிட்டுவிட்டார். அதன் பின் ‌ எதுவும் நடக்காதது போன்று அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வைரலாக நிலையில் சிலர் சமூக வலைத்தளம் மூலமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் நடிகர் சிரஞ்சிவீ -க்கு ஆதரவான கருத்துக்களையே பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது செல்பி எடுப்பதற்கு அவரிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும்… செல்பி எடுப்பதற்கு. அனுமதி வழங்குவது அவருடைய தனிப்பட்ட விருப்பம்….. இதில் எந்த வகையிலும் அவர் ரசிகரை. துன்புறுத்தவில்லை. சிரஞ்சீவி மீது எந்த தவறும் இல்லை… என பலதரப்பட்ட கமெண்ட்ஸ் அவருக்கு ஆதரவாகவே உள்ளன ..