இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக பிறந்த குழந்தை கூட இன்று செல்போன் இல்லாமல் சாப்பிட மறுக்கிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் பின்னாளில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் அறிவதில்லை. முடிந்த அளவிற்கு குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட்போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க, ஆரம்பத்தில் இருந்தே குறைவான நேரம் அவர்களுடைய கையில் போனை கொடுக்க வேண்டும்.

சாப்பிடும் நேரத்தில் அடம்பிடிக்கும் நேரத்தில் சமாதானம் செய்வதற்கு போனை கொடுக்க கூடாது. குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுகள், நடனம் மற்றும் ஓவியம் ஆகிய வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம். வீட்டிலேயே குழந்தைகளை வைத்து இருக்காமல் வெளியில் சென்று பிற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க வேண்டும். சிறுவயது முதலே வேறு ஆர்வத்தில் திசை திரும்பினால் செல்போனுக்கு அடிமையாவதை தவிர்க்கலாம்.