சைபர் கிரைம் செய்பவர்கள் கணினி மற்றும் இணையதளத்தில் பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் மற்றும் அவர்களுடைய முக்கியமான ஆவணத்தை பறிக்கின்றனர். சைபர் கிரைம்மால் இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எக்ஸ் டிஜிபி சைபர் கிரைம் பற்றி சில தகவல்களை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது சில சைபர் கிரைம் கும்பல் நூதனமான முறையில் மிரட்டி மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து சிலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் நீங்கள் அவரை வெளிக்கொண்டு வர பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் இதுபோன்ற தகவல்களை யாரும் நம்பவேண்டாம் காவல் துறையினரிடம் இதுபற்றி புகார் அளியுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் சைபர் கிரைம் மோசடி கும்பல் தன்னுடைய புகைப்படத்தை வைத்து இந்தியர்களிடம் பணம் பறிக்கும் முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைவரும் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.