
வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ள நிலையில் kyc சரிபார்ப்புக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவருடைய எக்ஸ் தள பக்கத்தில், KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் “வாடிக்கையாளர்களே தெரிந்துகொள்வீர்” KYC சரிபார்ப்புக்கு இறுதிக்கெடு விதிக்கவில்லை. போலி கணக்குகளை அகற்றவும், மோசடியான முன்பதிவை தடுக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் KYC யை உறுதி செய்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.