விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் ஜூலை 10 நாளை நடைபெற உள்ள நிலையில் திமுகவினர் பண பட்டுவாடா செய்து வருவதாக பாமகவினர் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள். ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

பனமலை, வெள்ளையம்பட்டு மற்றும் ஏழு செம்பொன் போன்ற பாமக வலுவாக இருக்கும் கிராமங்களில் பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்ற திமுக தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக திமுக 150 கோடி செலவு செய்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.