
சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான நிலையத்திற்கு காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் செய்த விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மையமானது சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள நிலையில் இந்த அலுவலகத்திற்கு கடந்த 18ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த வெடிகுண்டு இரவு9.45 மணிக்கு வெடிக்கும் என்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை நடத்தியதில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டது தெரியவந்தது .அதில் பிரசன்னா என்ற 27 வயது வாலிபரை கைது செய்துள்ளனர்.
பிகாம் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள உறவு பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் இவருடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தார் மீது கோபப்பட்டு அவர்களை போலீசில் மாட்டி விடுவதற்காக அவர்களின் பெயரை பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரசன்னா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.