
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ஆளுணருமான சிவசங்கரின் மனைவி லட்சுமி பாய் (94) நேற்று காலமானார். அவருக்கு காங்கிரஸ் தலைவரும் மூத்த அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் நிபுணருமான டாக்டர் வினய் குமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இவர் ஒடிசாவை சேர்ந்த முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் புகழ்பெற்ற வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் தாய் வழி மருமகளும் கூட. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நிறங்கள் தெரிவித்து வருகின்றனர்.