பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவியான பாடகி சைந்தவியும் 23 வருடங்கள் ஒன்றாக இருந்த நிலையில் தற்போது அவர்கள் பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பல பாடல்களைப் பாடியுள்ள நிலையில் அவர் சொன்ன ஒரு விஷயம் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது ஜிவி பிரகாஷ் இசையில் பாடும்போது  தனக்கு ஒரு சின்ன பயம் எப்போதும் இருக்கும் என்று சைந்தவி முன்பு கூறியுள்ளார்.

அவருடைய இசையில் பாடும் போது 2,3 டேக் வாங்கி இருக்கிறேன். என்னை ஒருபோதும் அவர் திட்டியது கிடையாது. ஆனால் சில சமயங்களில் நீ இப்ப சரியா பாட போறியா இல்லையான்னு கேட்பார். மேலும் சில நேரத்தில் தயவு செய்து கொஞ்ச நேரம் வெளியே இருங்க நான் பாடி முடிச்ச பிறகு வாங்கன்னு கூட அவர்கிட்ட சொல்லி இருக்கேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் இப்படி இருந்தவங்களா பிரிஞ்சுட்டாங்க என பலரும் கூறி வருகிறார்கள்.