
இந்தியாவில் உலக அஞ்சல் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்திய தபால் துறையின் குஜராத் வட்டம் நகர விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு இடங்களுக்கு அதிகப்படியான சாமான்களை அனுப்புவதற்கு அஞ்சல் துறையின் சேவைகளை பெறலாம் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சேவை இந்த வருடம் இறுதிக்குள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அகமதாபாத்தில் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பார்சல் முன்பதிவு கவுண்டர்கள் மற்றும் வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ரயில்வே அஞ்சல் அலுவலகங்கள் என பல முக்கிய தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை முன்பதிவுகள் மற்றும் மொபைல் பார்சல் பிக்கப் வழிகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.