தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அண்மையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து சென்னையில் புதிய வீடு வாங்கியதை தெரிவித்தார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் லியாம் டினர் என்ற புதிய உணவகத்தை தொடங்கி இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, எங்களது சொந்த உணவகம் இதுதான். எப்போதும் எங்களது கனவாக இருந்தது. இந்த நாளை நெருங்கையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றது. நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்து இருக்கின்றோம். உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கின்றேன். விரைவில் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.