
இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பின்னணியில் சத்தீஸ்கரில் ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 93 வயது முதியவர் ஒருவர் முதல் முறையாக தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் பாதித்த மாவட்டமான கங்கரில் உள்ள பைன்சகன்ஹார் கிராமத்தை சேர்ந்த 93 வயது முதியவர் ஷெர் சிங் ஹெட்கோவுக்கு இதுவரை வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்த அதிகாரிகள் இதனை அறிந்து அவருக்கு வாக்குரிமை வழங்கினர். தற்போது அந்த முதியவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.