
சமூக ஊடகங்களில் தற்போது வேடிக்கையான ஒரு வீடியோ மின்னலென பரவி வருகிறது. வீடியோவில், அந்த நபர் வங்கி செல்லும் காட்சி தொடங்குகிறது. பணம் எடுக்கும் படிவத்தில் அவர் மிக நம்பிக்கையுடன் ரூ.90 கோடி என்று எழுதி, காசாளர் கவுண்டருக்கு கொடுக்கிறார்.
அந்தக் கணத்தில் காசாளர் சில விநாடிகள் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் சந்தேகம் கொண்டு, “நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என கேட்கிறார். அதற்கு, “நான் ரூ.90 லட்சம் எடுத்துக்கணும்” என பதிலளிக்கிறார்.
View this post on Instagram
இதைத் தொடர்ந்து, காசாளர் கணக்கைச் செக் செய்ய, அதில் இருப்பது வெறும் ரூ.500 மட்டுமே என்று தெரியவருகிறது. அதையெல்லாம் பரவசமாகக் கூறும் அந்த நபர், “இப்பத்தான் என் கணக்கில் 90-91 லட்சம் வந்திருக்கணும்” என்கிறார். இதைக் கேட்டவுடன், காசாளரும் வங்கியில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும் சிரிப்பில் மூழ்குகின்றனர்.
இந்த வீடியோவை @viral_ka_tadka என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். பலரும் வேடிக்கையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.