திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் ராகுல் என்ற கோகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருடன் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த தரணி என்ற 20 வயது இளம் பெண்ணும் படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் நாளடைவில் நெருங்கி பழகியதால் தரணி கர்ப்பமானார்.

அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கோகுல் தங்களுடைய காதல் பற்றி பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் கோகுல் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நிலையில் அவர் மீது ரயில் ஏறி உயிரிழந்தார். இந்த தகவல் தரணிக்கு தெரிய வந்த நிலையில் அவர் இன்று காலை வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு சென்றார்.

அங்கு ரயில் வரும்போது அதன் முன் பாய்ந்து தரணி தற்கொலை செய்து கொண்டார். இதில் தரணியின் வயிற்றில் இருந்த குழந்தை சிதறி கீழே விழுந்தது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.