கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என சமாதானம் கூறும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிங்ஸியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.