
அமமுக கட்சியின் சிவகங்கை ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தவர் எம். பழனிவேல் ராஜன். இவரை தற்போது கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதாவது பழனிவேல் ராஜன் ஒரு 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் பழனிவேல் ராஜனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது பழனிவேல் ராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.