
பணியாளர் தேர்வு ஆணையம் மற்றொரு பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதற்கு பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள். இதில் பதவிகளை பொறுத்து மாத சம்பளம் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 3 முதல் மே 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.