
ஆந்திராவில் உள்ள ராமராவ் பேட்டை பகுதியில் லட்சுமணன் என்ற 32 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் இறால் பண்ணை வைத்து நடத்திவரும் நிலையில் தினசரி இரவு நேரம் பண்ணைக்கு சென்று விட்டு அதிகாலையில் தான் வீட்டிற்கு செல்வார். இவருடைய மனைவி நாகலட்சுமி (28) ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இந்த கல்லூரியில் படிக்கும் மணிகண்டா என்ற ஒரு 23 வயது மாணவனுடன் நாகலட்சுமி கள்ள உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பலமுறை வெளியில் சென்று ரகசியமாக உல்லாசமாக இருந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய கணவன் பண்ணைக்கு சென்றபோதில் மாணவனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு தன்னுடைய 7 வயது மகன் கண் முன்னே அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென லட்சுமணன் தன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அப்போது ஜன்னல் வழியாக லட்சுமணன் பார்த்தபோது தன்னுடைய மனைவியும் மாணவனும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டார். இதை பார்த்து லட்சுமணன் கதறி அழுத நிலையில் பின்னர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்த நிலையில் போலீசார் வந்து வாலிபரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.