
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களையும் பார்த்துள்ளார். வெறும் பத்து ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு ரத்தினம் பிள்ளை சிகிச்சை வழங்கி வந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
அவருக்கு 96 வயது ஆகிறது. மேலும் அவரது மறைவு செய்தி அந்த பகுதியில் இருப்பவர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.