
கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நிலையில் அந்த பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது மாணவி ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார். அதாவது தன்னுடைய தாய் கிட்டத்தட்ட 6 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறினார். இதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்த நிலையில் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில் தன்னுடைய தாய் பலாத்காரம் செய்வதாக கூறி கதறி அழுதார்.
இது பற்றி மாணவியின் தாயிடம் விசாரித்ததில் தன் மகளுக்கு கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார். மேலும் இதைத் தொடர்ந்து அந்த தாயை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.