பீகார் மாநிலம் ராணிகஞ்ச் என்னும் கிராமத்தில் இருபுறமும் சாலை இருப்பது போன்ற அடையாளங்கள் ஏதும் இல்லாதவாறு 35 அடி நீளத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மேல் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் பாலம் எதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நிலையில் ஊரக வளர்ச்சித்துறை இந்த பாலத்தை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிக்கையில் பர்மானந்த்பூர் கிராமத்தில் 2.5 கி.மீ நீளத்துக்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகபடுத்தப்படும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால் பாலம் அமைக்கும் பணி பாதியிலையே நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த பாலம் ரோடு அமைத்த பிறகு வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்களின் விவசாய நிலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளனர். மேலும் கிராம மக்களிடம் இருந்து விவசாய நிலத்தை கையகப்படுத்தியதுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த திட்டம் குறித்து ஊர் மக்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை,, அதனால் அவர்களுக்கு நீண்ட நாட்களாக ஏதற்கு இந்த பாலம்..! “வயல்களுக்கு நடுவே” என்ற குழப்பம் நிறைந்த சந்தேகம் இருந்து வந்துள்ளது. மேலும் இது எதோ ஒரு மிக பெரிய திட்டமா?  இருக்கும் என்று மக்கள் நினைத்துள்ளனர்.