தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு முடிவு குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.