
குரங்கம்மை நோய் பரவல் தடுப்பு குறித்த அவசர நிலையை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் 13 ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவசர நிலையை அறிவித்துள்ள WHO இதுவரை 14 ஆயிரம் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
குரங்கம்மை நோய் தாக்கத்தால் 524 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இதன் அறிகுறியாக முகம் முதல் உள்ளங்கால் வரை தோலில் கொப்பளங்கள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார மையம் தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டைப்புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தெரியவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.