
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தற்போது மேற்கத்திய நாடுகளில் பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் மான்ஸ்பீல்டு நகரத்தில் ஒரு அற்புத சாதனை நடந்துள்ளது.
அதாவது பிரபல நிறுவனம் ஒன்று ஏராளமான டிரோன்களை பயன்படுத்தி வானில் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் தாத்தாவை ஒளிரவிட்டனர். சுமார் 5000 டிரோன்களை வானில் பறக்க விட்டு பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை வானில் உலா வரும் வகையில் வடிவமைத்தனர். அதாவது பூமி உருண்டையை பின்னணியாக கொண்டு வானில் கிறிஸ்துமஸ் தாத்தா பறப்பது போன்று அந்த காட்சி இருந்தது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா போன்று உருவாக்கப்பட்ட அரிய நிகழ்வு எண்ணற்ற பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram