
பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் நிலையில் மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்கள்.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி கடந்த வருடம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர வேண்டுமென நிதி அயோக்கில் வலியுறுத்தினேன். மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்று பதிவு செய்துள்ளார்.