இந்தியாவில் வீடு இல்லாத மக்கள் வாழ்க்கையை எளிதாக்க அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் மூலம் ஏழை மக்கள் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதற்கான முக்கிய 5 திட்டங்களைபார்க்கலாம்.

1. பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதி திட்டம்
இந்த திட்டம் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. “அனைவருக்கும் வீடு” என்ற அடிப்படையில், மத்திய அரசு 1 கோடி வீடுகளை கட்டும் இலக்குடன் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி சலுகை வழங்கப்படுகிறது.

2. கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம்
இந்த திட்டம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமான வகைகளுக்கு வட்டி விகித சலுகைகள் வழங்குகிறது. 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம். இது வங்கியில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

3. ராஜீவ் வீட்டு வசதி திட்டம்
2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் நோக்கத்தில் உள்ளது. இது குறைந்த வருமானத்துள்ள மக்களுக்கு அடிப்படை சமூக வசதிகள் வழங்குகிறது. குடிசைப் பகுதிகளை அகற்றுவதன் மூலம் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது.

4. MHADA திட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்த திட்டம், மக்கள் வசிப்பதற்கான வீடுகளை மலிவான விலையில் வழங்குகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான வர்க்கங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

5. டிடிஏ திட்டம்
2018-இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்க்கத்திற்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த, நடுத்தர மற்றும் உயர் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.