உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு 5 பயணிகள் சென்றனர். அவர்களை ஏற்றிக் கொண்டு பராசு பகுதியில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானி அந்த ஹெலிகாப்டரை சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கினார். இதையடுத்து அதிலிருந்து 5 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானிக்கு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.