போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பலரும் பணத்தை சேமித்து வருகிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு ஐந்து வருடத்தில் 28 லட்சம் ரூபாய் லாபம் வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். இது ஒரு நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டம். இந்த திட்டம் சிறிய மற்றும் நடுத்த வருமானம் பெறுபவர்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்ட திட்டம். இதில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

அதிகபட்சமாக வரம்பு கிடையாது. வட்டி 7.7% வழங்கப்படுகிறது. லாக்கின் பீரியட் 5 வருடங்கள். குறைந்த ரிஸ்க் உள்ள திட்டம். மேலும் இந்த திட்டத்தில் ஒருவர் மட்டும் அல்லாமல் இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக்கணக்கும் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் 15 லட்சத்தை மொத்தமாகவும் அல்லது தொடர்ந்து மாதம் தோறும் ஒரு தொகை 15 லட்சம் அடையும் வரை முதலீடு செய்வதால் 7.7 சதவீதம் வட்டி விகிதத்தில் முதலீட்டின் மேல் 6,73,551 வட்டியாக பெறலாம். மேலும் ஐந்து வருட லாக்கின் காலத்தில் முடிவின் பொழுது மொத்தமாக 21,73,551 கிடைக்கும். இன்னும் அதிகமாக பணம் இருந்தால் அதிகம் முதலீடு செய்து அதிக வருமான ம் கிடைக்கும்.