
மத்திய பிரதேசம் மாநிலம் சத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 40 வயதான நபர் ஒருவர், தனது மகளை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அறிந்த அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த நபர் தனது மகள் மைனராக இருக்கும் போதிலிருந்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.