உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தின் ஜாபராபாத் பகுதியில், திருமண விழாவிற்குத் தாயுடன் சென்ற 4 வயது சிறுமி திடீரென காணாமல் போன நிலையில், காட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் இரவு 11 முதல் 12 மணி அளவில் சிறுமி திடீரென காணாமல் போனதால், அவர் அருகில் எங்காவது தூங்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால், காலை வரையிலும் சிறுமி கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசாரும் குடும்பத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
A 4 year old innocent girl who came for a relative wedding in Dhaneja village Jafrabad police station went missing while her mother was getting ready.
Family searched all night. In the morning her blood soaked body was found dumped 500 -600 meters away in the bushes.
Police… pic.twitter.com/jWQGdPkqxg
— Ramesh Tiwari (@rameshofficial0) June 29, 2026
தேடுதலின் போது, திருமண வீடு இருந்த இடத்தில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பாதையில் சிறுமியின் உடல் ரத்தக் கறைகளுடன் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து ஜான்பூர் எஸ்பி குன்வர் அனுபவம் சிங் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
