உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான்கு திருமணமான மகன்களின் தாயாக இருக்கும் ஒரு வயதான பெண், தனது 30 வயது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், தனது நான்கு மருமகள்களின் நகைகளையும் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம், புண்டேல்கண்ட் பகுதியின் ஜகௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவி ஒரு இளைய ஆணுடன் கடந்த 20 நாட்களாக பாசத்தைப் பேணிக்கொண்டு வந்ததாகவும், இறுதியில் அவருடன் ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் மருமகள்களுக்குச் சொந்தமான ஆபரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர்கள் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நேரடியாக கடிதம் எழுதி நீதிக்காக முறையிட்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மனு வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது அந்தப் பகுதியில் ஒரு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கிராம மக்கள் இதுபற்றி பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பெண்ணின் காதலனின் மனைவியும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், “என் கணவரின் செயலால் என் குடும்பமே அழிந்துவிட்டது. என் கணவரைத் திரும்பப் பெற்றுத் தர காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்” என வேதனை தெரிவித்தார்.  மேலும் தற்போது போலீசார் அந்த வயதான பெண்ணையும் அவரது காதலனையும் தேடும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.