உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹோலி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிஷா (22) என்பவரின் காதலன் தனஞ்சய் அறைக்கு வந்துள்ளார். இருவரும் 4 நாட்கள் வீட்டில் மகிழ்ச்சியாக கழித்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையை அடுத்து அந்த இளைஞர் தனது காதலியை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

பின்னர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி அந்த இளைஞனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.