ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் குய்ஹுரு கிராமத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கம்பா மாலிக் (60) என்பவரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 3- ஆம் தேதி கம்பா மாலிக் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த போது கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடந்தது.

அது காணாமல் போன கம்பா மாலிக்கின் சடலம் என்பது தெரியவந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காமாலிக்கின் மனைவி உயிரிழந்தார். அதிலிருந்து அவர் கிராமத்தில் வசிக்கும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த 8 பெண்கள் உள்பட 10 பேர் கும்பலாக வீட்டிற்குள் நுழைந்து கம்பா மாலிக்கை கடத்தி சென்று வனப்பகுதியில் வைத்து கொலை செய்தனர். அதன் பிறகு அவரது உடலை எரித்து விட்டு சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.