இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் மலிவு கட்டண திட்டங்களையும் வழங்குகிறது.

அதே சமயம் ஒருபுறம் 4ஜி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே மறுபுறம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி 395 நாட்களில் வேலிடிட்டி கொண்ட ரூ.2,399 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் அதிவேக 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.