விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வளவனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சுகுணா என்ற மனைவி இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகேஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதனால் ‌ சம்பவ நாளில் மகேஷ் வீட்டில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு  அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது