
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் குழந்தையின் மரணம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் தற்போது அறிக்கை வெளிவந்தது. அதில் குழந்தையை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அடித்தே கொன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவா என்பவர் குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தற்போது போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக செல்லும் வழியில் பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அந்த குழந்தையின் தாயுடன் ஜீவா தகாத உறவில் இருந்த நிலையில் 3 வயது குழந்தையை ஒரு வார காலமாக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து தினசரி அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
அந்த குழந்தையை ஒரு வாரமாக அவர் வன்கொடுமை செய்து அடித்ததில் தான் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.