ஈரோடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். குமாரபாளையம் பகுதியில் நேற்று பேசிய அவர், ‘இந்த கூட்டத்தை பார்க்கும் போது திமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

வாக்கு இயந்திரத்தில் மூன்றாவது இடத்தில் திமுக சின்னம் இருக்கும். அதை அழுத்தி மோடிக்கு நாம் வேட்டு வைக்க வேண்டும். மோடி தேர்தல் வருவதால் தமிழகத்தை சுற்றிக்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மோடி வீடு எடுத்து தங்கி சுற்றினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார். இதை பெரியார் மண்ணில் இருந்து சொல்கிறேன்’ என்றார்.