திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட விரோதமாக 26 பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் அப்பகுதியில் போலீ ஆதார் கார்டுகளை பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் யார் என்பதை குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.