
உத்திரபிரதேச மாநிலம் பிஜனூர் மாவட்டத்தில் சர்பரா சகமது (26) என்பவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சிகிச்சையின் நடுவே மின்சாரம் தடைபட்டதால் அகமது பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகன் இறந்ததற்கு மின்சாரம் பாதியிலேயே நின்றது தான் காரணம் என அகமதுவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரம் போனதால் என் மகன் ரத்தம் பாதியிலேயே கருவிக்குள் சிக்கிக் கொண்டது.
அப்போது பணியாளர்களிடம் ஜெனரேட்டரை இயக்க சொல்லி கெஞ்சினேன். யாரும் உதவி செய்யவில்லை. எனது மகன் உடனே இறந்து விட்டான் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது பிஜ்னோர் மருத்துவமனையில் ஜெனரேட்டரில் டீசல் இல்லாதது உறுதியானது.
ஒப்பந்த நிறுவனம் டீசல் வழங்காததால் சிகிச்சை தொடர முடியாது நிலை ஏற்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள் டயாலிசிஸ் கருவியில் அதிக ரத்தம் தேங்க வாய்ப்பில்லை என்றாலும், திடீரென மின்தடை ஏற்படுவது நோயாளிகளின் நிலைமையை மோசமாகும் என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.