தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவில் முதன்முதலாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவரின் குறும்புத்தனமான நடிப்பாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்று நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் 25 ஆண்டுகளுக்குபின் மீண்டும் ஜோதிகா இந்தி சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். மாதவன். அஜய்தேவ்கன் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை ‘க்யூன்’ பட இயக்குநர் விகாஸ்பாஹ்லின் எடுக்கிறார். ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.