மத்திய கிழக்கில் வலுப்பெறும் பதற்றங்கள் மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் திறந்தவெளியாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் விமானத் தளங்கள் மற்றும் அணுமின் ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், டொனால்ட் டிரம்ப், “இஸ்ரேல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் 12 மணி நேரத்திற்குப் பிறகு தாக்குதலை நிறுத்தும். 24 மணி நேரத்துக்குள் முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வரும்” என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் முற்றிலும் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறியதாவது: “இஸ்ரேலுடன் எங்களுக்குள் எந்தவிதமான போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். தற்போது வரைநாங்கள் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றோம். இறுதி முடிவை எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஈரான் தலைமையினருடன் கத்தார் அரசியல் தலைவர் ஒருவர் நேரில் பேசி, தாக்குதலை முடிக்க உறுதியளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இருநாடுகளும் தவிர்த்து, வெளிப்படையான அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கில் உண்மையான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்படுகிறது.