
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். பிரதமர் மோடி புதிதாக இதை கொண்டு வரவில்லை. முன்பே இப்படித்தான் தேர்தல் நடந்தது.
2029 தேர்தலுக்குப் பிறகுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் பணிகளை குடியரசு தலைவர் ஆரம்பிப்பார். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு லட்சம் கோடி செலவு ஆகியுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் 12000 கோடி சேமிப்பு நமக்கு கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.