
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியது போது கூறியதாவது, சௌமியா என்னை வந்து பார்த்து மாமா என்றார். நான் ஏமா என்றேன்.
ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாமா என சௌமியா என்னிடம் கூறினார். பாஜகவினர் கூட்டணி குறித்து பேச தைலாபுரம் வருவது எனக்கு தெரியாது. என் பேச்சுக்கு மாறாக சௌமியா அன்புமணி தர்மபுரியில் வேட்பாளராகப்பட்டார்.
அன்புமணிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் வந்தது. பாமக என்ற மாளிகையில் நான் குடியமை நடத்தியவர் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். அன்பு மணியுடன் பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.
முயலுக்கு மூன்று கால் என்ற வாதிட்டு கொண்டிருக்கிறார். 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக் கொள்ளப் போகிறார். அன்புமணி கட்சியை சரியாக வழி நடத்தவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.