அதிமுக கள ஆய்வு குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் அதிமுக கிளை வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் பற்றி நேரடியாக கள ஆய்வு செய்து அவற்றின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக கருத்துக்களை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு ஆற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.