
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயார் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மை மக்களை சந்தித்து கட்சியை நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால் கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துச் செல்லுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.