ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் ஜனவரி மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி,

* தொடர்ந்து 18 மாதங்களுக்கு செயல்பாட்டில் இல்லாதா யூபிஐ (UPI) கணக்குகள் ஜனவரியில் முடக்கப்பட இருக்கின்றன.

* திருத்தப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளில் கையெழுத்திடாத வாடிக்கையாளர்களின் வங்கி லாக்கர் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான கெடு தினமாக டிச.31 அறிவிக்கப்பட்டிருந்தது.

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 குறைந்து ரூ.450க்கு கிடைக்க உள்ளது.

*சிம் கார்டுகள் பெறுவதில் முறைகேடுகளை தடுக்கவும் தவிர்க்கவும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.